நீ நீயாகவும்
நான் நானாகவும்
இருந்த
பொழுதுகள்
நிஜமானவை...
நாம்
நாமாகும்
போதுமட்டும்
நிசப்தம் ஏன்?
பள்ளித் தோழியாய்
எதிர் வீட்டு
உறவாய்த்தான்
நம் அடையாளம்...
உன்
பாவாடைப் பருவம்
தாவணி பதித்த
முதல் நாள்
வீட்டுக்கு தூரம்
என்று
வெட்கம் பதித்தாய்
பெரியவாளாகிவிட்டாதாய்
பேச மறுத்தாய்..
அன்றே
சில கேள்விகள்
என்னுள்
அவசரமாகி
அவசியமாகின
இருப்பினும்
அடைகாத்தேன்...
பள்ளித் தோழியாய்
என்
பக்கம் நின்றவள்
வெட்கத்தீயில்
வெப்பம் பாய்ச்சினாய்..
போலியாய்
சில
பொழுதுகள்
கழித்தேன்..
சில நாட்கள்
உன்னை
கவனிக்க
ஆரம்பித்தேன்..
பிரம்மமுகூர்த்தத்தில்
எழுந்து
ஃபிரஷ்ஷாய்
குளித்து...
விரித்த கூந்தல்
உலர்த்திக் கொண்டே
விரிந்த முற்றம்
துடைத்து...
சாணி தெளித்து
சங்கிலி கோலத்தில்
புள்ளிகள்
கைது செய்து...
பரபரப்பாய்
பம்பரமாய்
என் பார்வைக்குப்
பட்டாய்..
நிஜங்கள் கற்பனையாகி
கற்பனைகள் நிஜமாகும்
நிகழ்வுகள்
தொடங்கிற்று....
"உன்
வளவிச் சத்தம்
கேட்ட பின்புதான்
கோழி கூட
கூவுகிறதோ"
அட!
நான் கவிஞனாக்கப்
படுகிறேன்
அடுத்த நிலைக்கான
கேள்விகளோடு.....
உண்மையில்
நீ நீயாகவும்
நான் நானாகவும்
இருந்த
பொழுதுகள்
நிஜமானவை...
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அழகாய் இருக்கிறது தொடரட்டும் வாழ்த்துக்கள்!
கவிதைக்கு இன்னும் அழகியல்தேவை
ம்ற்ற படி அனைத்தும் அருமை
தொடர்க
கவிஞர்வாலிதாசன்
முகவை-1
9894887705
Post a Comment