Friday, September 21, 2007


வைகறை பொழுது!
பூங்காவின் புற்களில்
என்னை
தொலைத்திருந்தேன்..

திடீரென
என்னை
மீட்டெடுத்தது
ஓர் தென்றல்...


நிமிர்ந்து
நோக்கினேன்
ஒளி வெள்ளமாய்
அவள்!
புன்னகை செய்து
புறப்பட்டாள்...

மீண்டும்
தொலைந்தேன்..
இனியும்
மீள முடியா
தூரத்திற்கு.....

0 comments: