வானம் இன்று
செயற்கையாய் சிரிக்கும்
காற்றும் கூட
கலர்கள் தெளிக்கும்
கீழிருந்து மேல்
இடிகள் தோன்றும்
அல்லது
தோற்றுவிக்கப் படும்
வீதிகளெங்கும்
புத்தாடை வீசும்
வீடுகளெங்கும்
விளக்குகள் பேசும்
அவரவர் வசதியை
தீபம் திரிக்கும்
ஓலைக் கூடு
ஓட்டு வீடு
பளிங்குத் தரை
பட்டண அறை
எல்லாம் எல்லாம்
பண்டங்கள் படைக்கும்
பல உறவுகள்
பல உணர்வுகள்
சுவைத்து சுவைத்து
பொழுதுகள் ருசிக்கும்
ஆனாலும்
இன்னும் இன்னும்
பரவிக் கிடக்கிறது
காய்ந்த வயிறுகளின்
கனல் மூச்சுக்கள்
காற்றின் வெளியில்
காய்ந்த படியே...
ஆதலால்
புதியதோர்
தீபம் செய்வோம்
அதில்
புன்னகைத்
திரியை நெய்வோம்
அட்சய எண்ணையிட்டே
நாளும்
ஆளுக்கோர்
இரைப்பை காப்போம்.....
தீபாவளி வாழ்த்துக்கள்!!!!!!!!
Wednesday, November 7, 2007
Saturday, November 3, 2007
முரண்
"சீ!
ஒரே கலீஜ்ஜா இருக்கு"
சொந்த ஊரை
மென்று துப்பினார்
அந்த அமெரிக்க ரிட்டன்
வியர்வை நொடிகளையும்
வற்றிய மார்பையும்
பொருட்படுத்தாது
பால் வார்த்த தாய்
முகம் சுழித்தாள்
அவன்
பெர்ஃபியூம் நாற்றம்
ஒத்துவராததால்...
ஒரே கலீஜ்ஜா இருக்கு"
சொந்த ஊரை
மென்று துப்பினார்
அந்த அமெரிக்க ரிட்டன்
வியர்வை நொடிகளையும்
வற்றிய மார்பையும்
பொருட்படுத்தாது
பால் வார்த்த தாய்
முகம் சுழித்தாள்
அவன்
பெர்ஃபியூம் நாற்றம்
ஒத்துவராததால்...
Labels:
கவிதைகள்
தவிப் பூ
கடந்து செல்லும்
மனிதர்களை
மிச்சம் வைக்காது
"கணத்து" ஒலித்தது
சாலையோர
பூக்காரியின் குரல்
அதில்
தண்டல் காரன்
தெரிந்தான்..
மனிதர்களை
மிச்சம் வைக்காது
"கணத்து" ஒலித்தது
சாலையோர
பூக்காரியின் குரல்
அதில்
தண்டல் காரன்
தெரிந்தான்..
Labels:
கவிதைகள்
Friday, September 21, 2007
வைகறை பொழுது!
பூங்காவின் புற்களில்
என்னை
தொலைத்திருந்தேன்..
பூங்காவின் புற்களில்
என்னை
தொலைத்திருந்தேன்..
திடீரென
என்னை
மீட்டெடுத்தது
ஓர் தென்றல்...
என்னை
மீட்டெடுத்தது
ஓர் தென்றல்...
நிமிர்ந்து
நோக்கினேன்
ஒளி வெள்ளமாய்
அவள்!
புன்னகை செய்து
புறப்பட்டாள்...
மீண்டும்
தொலைந்தேன்..
இனியும்
மீள முடியா
தூரத்திற்கு.....
நோக்கினேன்
ஒளி வெள்ளமாய்
அவள்!
புன்னகை செய்து
புறப்பட்டாள்...
மீண்டும்
தொலைந்தேன்..
இனியும்
மீள முடியா
தூரத்திற்கு.....
Labels:
கவிதைகள்
நீ நீயாகவும்
நான் நானாகவும்
இருந்த
பொழுதுகள்
நிஜமானவை...
நாம்
நாமாகும்
போதுமட்டும்
நிசப்தம் ஏன்?
பள்ளித் தோழியாய்
எதிர் வீட்டு
உறவாய்த்தான்
நம் அடையாளம்...
உன்
பாவாடைப் பருவம்
தாவணி பதித்த
முதல் நாள்
வீட்டுக்கு தூரம்
என்று
வெட்கம் பதித்தாய்
பெரியவாளாகிவிட்டாதாய்
பேச மறுத்தாய்..
அன்றே
சில கேள்விகள்
என்னுள்
அவசரமாகி
அவசியமாகின
இருப்பினும்
அடைகாத்தேன்...
பள்ளித் தோழியாய்
என்
பக்கம் நின்றவள்
வெட்கத்தீயில்
வெப்பம் பாய்ச்சினாய்..
போலியாய்
சில
பொழுதுகள்
கழித்தேன்..
சில நாட்கள்
உன்னை
கவனிக்க
ஆரம்பித்தேன்..
பிரம்மமுகூர்த்தத்தில்
எழுந்து
ஃபிரஷ்ஷாய்
குளித்து...
விரித்த கூந்தல்
உலர்த்திக் கொண்டே
விரிந்த முற்றம்
துடைத்து...
சாணி தெளித்து
சங்கிலி கோலத்தில்
புள்ளிகள்
கைது செய்து...
பரபரப்பாய்
பம்பரமாய்
என் பார்வைக்குப்
பட்டாய்..
நிஜங்கள் கற்பனையாகி
கற்பனைகள் நிஜமாகும்
நிகழ்வுகள்
தொடங்கிற்று....
"உன்
வளவிச் சத்தம்
கேட்ட பின்புதான்
கோழி கூட
கூவுகிறதோ"
அட!
நான் கவிஞனாக்கப்
படுகிறேன்
அடுத்த நிலைக்கான
கேள்விகளோடு.....
உண்மையில்
நீ நீயாகவும்
நான் நானாகவும்
இருந்த
பொழுதுகள்
நிஜமானவை...
நான் நானாகவும்
இருந்த
பொழுதுகள்
நிஜமானவை...
நாம்
நாமாகும்
போதுமட்டும்
நிசப்தம் ஏன்?
பள்ளித் தோழியாய்
எதிர் வீட்டு
உறவாய்த்தான்
நம் அடையாளம்...
உன்
பாவாடைப் பருவம்
தாவணி பதித்த
முதல் நாள்
வீட்டுக்கு தூரம்
என்று
வெட்கம் பதித்தாய்
பெரியவாளாகிவிட்டாதாய்
பேச மறுத்தாய்..
அன்றே
சில கேள்விகள்
என்னுள்
அவசரமாகி
அவசியமாகின
இருப்பினும்
அடைகாத்தேன்...
பள்ளித் தோழியாய்
என்
பக்கம் நின்றவள்
வெட்கத்தீயில்
வெப்பம் பாய்ச்சினாய்..
போலியாய்
சில
பொழுதுகள்
கழித்தேன்..
சில நாட்கள்
உன்னை
கவனிக்க
ஆரம்பித்தேன்..
பிரம்மமுகூர்த்தத்தில்
எழுந்து
ஃபிரஷ்ஷாய்
குளித்து...
விரித்த கூந்தல்
உலர்த்திக் கொண்டே
விரிந்த முற்றம்
துடைத்து...
சாணி தெளித்து
சங்கிலி கோலத்தில்
புள்ளிகள்
கைது செய்து...
பரபரப்பாய்
பம்பரமாய்
என் பார்வைக்குப்
பட்டாய்..
நிஜங்கள் கற்பனையாகி
கற்பனைகள் நிஜமாகும்
நிகழ்வுகள்
தொடங்கிற்று....
"உன்
வளவிச் சத்தம்
கேட்ட பின்புதான்
கோழி கூட
கூவுகிறதோ"
அட!
நான் கவிஞனாக்கப்
படுகிறேன்
அடுத்த நிலைக்கான
கேள்விகளோடு.....
உண்மையில்
நீ நீயாகவும்
நான் நானாகவும்
இருந்த
பொழுதுகள்
நிஜமானவை...
Labels:
கவிதைகள்
ஊடல் சுகம்
நான் பூக்களையே
பார்த்துக்கொண்டிருக்கிறேன்
பூக்களின் மீதும்
உங்களுக்கு
காதலாஎன்கிறாய் நீ....
இல்லை இல்லை
ஊடலின் மீதும்
ஊடல்சார்ந்த
கூடலின் மீதும்
காதல் என்கிறேன் நான்...
கேள்விக்குறியாய்
நெளிகிறது
உன் புருவம்.....
உன்னிலும் சிறந்த
ஏதேனும் ஒன்று
இப் பூவிலும்
இருந்துவிடக் கூடாதா
என்னுமொரு கோணத்தில்
பூக்களின் மீது
பதிகிறது என் பார்வை..
இறுதியில்
தோற்றுப் போகிறது
பூக்களும்
என் ஊடலும்........
பார்த்துக்கொண்டிருக்கிறேன்
பூக்களின் மீதும்
உங்களுக்கு
காதலாஎன்கிறாய் நீ....
இல்லை இல்லை
ஊடலின் மீதும்
ஊடல்சார்ந்த
கூடலின் மீதும்
காதல் என்கிறேன் நான்...
கேள்விக்குறியாய்
நெளிகிறது
உன் புருவம்.....
உன்னிலும் சிறந்த
ஏதேனும் ஒன்று
இப் பூவிலும்
இருந்துவிடக் கூடாதா
என்னுமொரு கோணத்தில்
பூக்களின் மீது
பதிகிறது என் பார்வை..
இறுதியில்
தோற்றுப் போகிறது
பூக்களும்
என் ஊடலும்........
Labels:
கவிதைகள்
Subscribe to:
Posts (Atom)