வானம் இன்று
செயற்கையாய் சிரிக்கும்
காற்றும் கூட
கலர்கள் தெளிக்கும்
கீழிருந்து மேல்
இடிகள் தோன்றும்
அல்லது
தோற்றுவிக்கப் படும்
வீதிகளெங்கும்
புத்தாடை வீசும்
வீடுகளெங்கும்
விளக்குகள் பேசும்
அவரவர் வசதியை
தீபம் திரிக்கும்
ஓலைக் கூடு
ஓட்டு வீடு
பளிங்குத் தரை
பட்டண அறை
எல்லாம் எல்லாம்
பண்டங்கள் படைக்கும்
பல உறவுகள்
பல உணர்வுகள்
சுவைத்து சுவைத்து
பொழுதுகள் ருசிக்கும்
ஆனாலும்
இன்னும் இன்னும்
பரவிக் கிடக்கிறது
காய்ந்த வயிறுகளின்
கனல் மூச்சுக்கள்
காற்றின் வெளியில்
காய்ந்த படியே...
ஆதலால்
புதியதோர்
தீபம் செய்வோம்
அதில்
புன்னகைத்
திரியை நெய்வோம்
அட்சய எண்ணையிட்டே
நாளும்
ஆளுக்கோர்
இரைப்பை காப்போம்.....
தீபாவளி வாழ்த்துக்கள்!!!!!!!!
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
வணக்கம் சண் சிவா.ஆழமான அழகான கவிதைகள்.தொடருங்கள்.
Nalla kavithai
உயிர்ப் பூ
arumai arumai
Post a Comment