Wednesday, November 7, 2007

தீபாவளி

வானம் இன்று
செயற்கையாய் சிரிக்கும்
காற்றும் கூட
கலர்கள் தெளிக்கும்

கீழிருந்து மேல்
இடிகள் தோன்றும்
அல்லது
தோற்றுவிக்கப் படும்

வீதிகளெங்கும்
புத்தாடை வீசும்

வீடுகளெங்கும்
விளக்குகள் பேசும்
அவரவர் வசதியை
தீபம் திரிக்கும்

ஓலைக் கூடு
ஓட்டு வீடு
பளிங்குத் தரை
பட்டண அறை
எல்லாம் எல்லாம்
பண்டங்கள் படைக்கும்

பல உறவுகள்
பல உணர்வுகள்
சுவைத்து சுவைத்து
பொழுதுகள் ருசிக்கும்

ஆனாலும்
இன்னும் இன்னும்
பரவிக் கிடக்கிறது
காய்ந்த வயிறுகளின்
கனல் மூச்சுக்கள்
காற்றின் வெளியில்
காய்ந்த படியே...

ஆதலால்
புதியதோர்
தீபம் செய்வோம்
அதில்
புன்னகைத்
திரியை நெய்வோம்
அட்சய எண்ணையிட்டே
நாளும்
ஆளுக்கோர்
இரைப்பை காப்போம்.....

தீபாவளி வாழ்த்துக்கள்!!!!!!!!

3 comments:

said...

வணக்கம் சண் சிவா.ஆழமான அழகான கவிதைகள்.தொடருங்கள்.

said...

Nalla kavithai

said...

உயிர்ப் பூ


arumai arumai