Wednesday, December 2, 2009

ஓட்டைகள்

அம்மன் சாட்சியாக
நம் திருமணம் நடந்தே தீறும்
என்கிறாய்...

அது எப்படி சாத்தியம்?

நானோ கோவிலின் வெளியே
எங்கெளுக்கென நியமிக்கப்பட்ட
ஓட்டையின் வழியே அம்பாளைப் பார்க்கிறவன்..
நீயோ உட்பிரகாரத்தில்
அருகிலிருந்து அம்பாளை தரிசிப்பவள்...

அது எப்படி சாத்தியம்?


முதலில் ஓட்டைகள்
அடைபடட்டும்....

0 comments: